பால் உணர்த்தும் ஈறுகள்

பால் உணர்த்தும் ஈறுகளைப் பாலறி கிளவி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவற்றை அது ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்னும் 11 எழுத்துக்கள் என வரையறுத்துச் சுட்டிக் காட்டுகிறது. [1] உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், அஃறினையில் ஒன்றன்பால், பலவின்பால் என்பன தமிழ் மொழியில் உள்ள ஐந்து பால்கள்.

பெயரும் வினையுமாக வாக்கியம் அமையும்போது பெயரில் தோன்றும் பாலறி கிளவியும், வினையில் தோன்றும் பாலறி கிளவியும் மயக்கமின்றி (முரண்படாமல்)வருதல் நெறி. [2]

  • நல்லவன் வந்தான் (ஆண்பால்)[3]
  • நல்லவள் வந்தாள் (பெண்பால்)[4]
  • நல்லவர் வந்தார் (பலர்பால்), வரு (எதிர்காலம்), ஆர்த்தார் கொண்மார் வந்தார். (முற்றெச்சம்)[5]
  • நல்லது வந்தது (ஒன்றன்பால்) ஆடு ஓடிற்று, தவளை குண்டுகட்டு (குண்டுக்கண் உடையது)[6]
  • நல்லவை வந்தன() (பலவின்பால்), தீயவை வாரா(), அவை உண்கு (எதிர்காலம்)[7]

நன்னூல் இவற்றை விகுதி என்று பதத்தின் பகுதியாகக் காட்டுகிறது.

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் கிளவியாக்கம் 10
  2. வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
    பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
    மயங்கல் கூடா தம் மரபினவே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 11)
  3. னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 5
  4. ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 6
  5. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
    மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
    நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 7)
  6. ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த
    குன்றியலுகரத்து இறுதி ஆகும். (தொல்காப்பியம் கிளவியாக்கம் 8)
  7. அ ஆ வ என வரூஉம் இறுதி
    அப் பால் மூன்றே பல அறி சொல்லே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 9)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.