பாரதி (இதழ்)

பாரதி இலங்கையின் முதலாவது முற்போக்குக் கலை இலக்கிய சஞ்சிகை ஆகும். கே. கணேஷ், கே. ராமநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 1948 இல் வெளியானது. பாரதி சஞ்சிகை பொதுவுடமைச் சிந்தனைக்கு இலக்கியத்தில் முக்கியத்துவமளித்தது.

கே.கணேஷ் தனது தோட்டத்தின் ஒரு பகுதியை விற்றே பாரதி சஞ்சிகையை வெளியிட்டதாக மூன்றாவது மனிதன் இதழுக்கான நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.