பாரதம் (நூல்)

தமிழில் பாரதக் கதையை செய்யுள் வடிவில் கூறும் பண்டைய நூல்கள் எட்டு. அவை வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தொகுத்துக் காண்பது நன்று.

நிரலடைவு

நூல்ஆசிரியர்நூற்றாண்டுகுறிப்பு
பாரதம்--"மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" [1][2]
பாரதம்பாரதம் பாடிய பெருந்தேவனார்-எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடிய புலவர்
பாரத வெண்பாபெருந்தேவனார்825-885 [3]பாட்டும் உரையும் கலந்த நூல் [4]
பாரதம்கருணிலை விசாகன்13 [5]திருவாலங்காடு கல்வெட்டுக் குறிப்பு
வில்லிபாரதம்வில்லிபுத்தூர் ஆழ்வார்14 [6]4351 பாடல் [7][8]
ஆதிபருவத்து ஆதிபருவம்அம்பலத்தாடுமையன்17சந்தனு வரலாறு மட்டும்
பாரதப் பிற்பகுதிஅட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர்1811-18 ஆம் நாள் போர் மட்டும். 2477 பாடல் [9]
நல்லாப்பிள்ளை பாரதம்நல்லாப்பிள்ளை முருகேச முதலியார்19புதிதாக 11,000 பாடல்கள் பாடி வில்லிபாரதத்தை விரிவாக்கினார்.[10]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. சின்னமனூர்ச் செப்பேடு நூல்
  2. இன்று இல்லை
  3. மூன்றாம் நந்திவர்மன் காலம்
  4. ஒருபாடலில் நந்திவர்மனைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
  5. மூன்றாம் குலோத்துங்கன் காலம்
  6. வக்கபாகை வரபதி ஆட்கொண்டான் இப்புலவரைப் பேணினான்
  7. பாரதப் போரில் 10 நாள் போர் வரையில் உள்ளது.
  8. இந்நூலின் பாயிரப் பகுதியை ஆசிரியரின் மகன் 'வரந்தருவார்' பாடியுள்ளார்.
  9. பதிப்பு 1922
  10. நாட்டுப்படலம் நகரப்படலம் சேர்க்கப்பட்டுள்ளன
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.