பா. அரியநேத்திரன்
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (Pakkiyaselvam Ariyanethiran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் நா.உ | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2004 | |
முன்னவர் | கிங்ஸ்லி ராசநாயகம் |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இருப்பிடம் | சிறீ ஜெயவர்த்தனபுர, இலங்கை |
சமயம் | இந்து |
அரசியலில்
இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனாலும் கிங்ஸ்லி ராசநாயகம் மே 2004 இல் தனது பதவியைத் துறந்ததை அடுத்து கட்சிப் பட்டியலில் இருந்து அரியநேத்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்[1]. 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தெரிவானார்[2].
மேற்கோள்கள்
- "P. ARIYANETHRAN". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம்.
- "Parliament meets Tuesday, one SLMC MP crosses over to govt. bench". தமிழ்நெட். 18 மே 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12026.
- "Parliamentary General Election - 2010 Batticaloa Preferences". Department of Elections, Sri Lanka.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.