நூறு வருட மட்டுநகர் நினைவுகள்
நூறு வருட மட்டுநகர் நினைவுகள் என்பது 1893 - 1993 வரையான மட்டக்களப்பின் சமூக வரலாற்றைக் கூறும் ஒரு நூல்.[1][2] இதனை எஸ். பிரான்சிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இந்நூல் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் 100 ஆண்டு (யூபிலி ஆண்டு) நினைவு நூலாக வெளியிடப்பட்டது.[3] இது ஒரு கத்தோலிக்க நினைவுகளைக் கூறும் நூலாக இருந்தபோதிலும், நூறு ஆண்டு காலத்தில் இலங்கையின் மட்டக்களப்பில் ஏற்பட்ட நிகழ்வுகள், கல்வி நிலை, சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் என்பன இந்நூலில் காணக்கிடைக்கின்றன. எ.கா: அப்போது கல்லடிப் பாலம் இல்லாதபோது அக்கறைக்குச் செல்ல விதவைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது.[4] அது தொடர்பான வரலாற்று ஒளிப்படங்களும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினருக்கு அனுபவ பகிர்வு போன்று இது அமைந்துள்ளது.
![]() முன் அட்டை: நூறு வருட மட்டுநகர் நினைவுகள் | |
நூலாசிரியர் | எஸ். பிரான்சிஸ் |
---|---|
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
வகை | சமூகவியல் |
வெளியீட்டாளர் | அன்பு வெளியீடு, ஆரையம்பதி |
வெளியிடப்பட்ட திகதி | 1994 |
பக்கங்கள் | X + 56 |
தற்போது பயன்பாட்டில் இல்லாத அல்லது பயன்பாட்டில் இருந்து அருகி வரும் பொருட்களான உமல், கரப்பு, ஓட்டிக்கூடு, ஆசந்தி, உடுக்கை, தூம்பை, அத்தாங்கு, நண்டுக்கூடு போன்றவை படங்களாக வரையப்பட்டிருப்பது இதன் சிறப்பு ஆகும்.
பொருளடக்கம்
- சுருக்க வரலாறு
- வாழ்க்கை வசதிகள்
- சனமும் சாகியமும்
- கிறிஸ்தவ சமயம்
- கத்தோலிக்க சமயம்
- கத்தோலிக்க சமயம் பற்றிய தெளிவு
- பாதயாத்திரைகள்
- நினைவைவிட்டு நீங்காத நிகழ்ச்சி
மேற்கோள்கள்
- "மட்டக்களப்பு". பார்த்த நாள் 9 பெப்ரவரி 2015.
- "மதுர தமிழ் பேசும் மட்டக்கள்பபு மக்கள்".
- வெட்டாப்பு. திருமலை - மட்டக்களப்பு மறைமாவட்டம். 1-1-1995.
- "கல்லடிப் பாலத்தில் ஆபத்து ; மக்கள் அவதானம் (காணொளி இணைப்பு)". வீரகேசரி.