நிர்மலா (திரைப்படம்)
நிர்மலா இலங்கையில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் 1968 ஆம் ஆண்டு சூலை 15 இல் வெளியிடப்பட்டது. ஏ. ரகுநாதனின் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தை அருமைநாயகம் என்பவர் நெறிப்படுத்தினார்.[1]
நிர்மலா | |
---|---|
இயக்கம் | அருமைநாயகம் |
தயாரிப்பு | ஏ. ரகுநாதன் |
மூலக்கதை | மூர்த்தி |
திரைக்கதை | நவாலியூர் நடேசன்[1] |
வசனம் | நவாலியூர் நடேசன் |
இசை | திருகோணமலை பத்மநாதன் |
நடிப்பு | ஏ. தங்கவேல், சந்திரகலா, ஏ. ரகுநாதன், விஸ்வநாதராஜா, எஸ். எஸ். சின்னையா, கோகிலா ராஜரத்தினம், எஸ். நாகேந்திரம், ஏ. ஆர். சகாப்தீன், எம். ரி. அரசு, துன்னையூர் மகிந்தன், பிரான்சிஸ் ஜெனம், ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஸ். நாகராசா, ஐசக் செல்வரத்தினம், ஏ. நற்குணசேகரம் |
பாடலாசிரியர் | முருகையன், சில்லையூர் செல்வராஜன் |
ஒளிப்பதிவு | கபூர் (மன்னார்) |
படத்தொகுப்பு | அருமைநாயகம் |
கலையகம் | சிலோன் ஸ்டூடியோ |
விநியோகம் | கலாபவன் பிலிம்சு |
வெளியீடு | 1968 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
பாடல்களுக்கான இசையை திருமலை பத்மநாதன் அமைத்திருந்தார். பாடல்களை முருகையன், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1] நிர்மலா படத்தில் வரும் "கண்மணி ஆடவா" என்ற பாடல் பல ஆண்டுகளாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ்பெற்ற பாடல் ஆகும்.
மேற்கோள்கள்
- "நான்காவது உள்ளூர் சினிமாவாக வெளிவந்த 'நிர்மலா'". தினகரன் வாரமஞ்சரி. 1-10-2018.
வெளி இணைப்புகள்
- "தெய்வம் தந்த கலைஞன்" ரகுநாதன், கானா பிரபா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.