நாட்டை

நமது இசையில் பல நாட்டை இராகங்கள் காணப்படுகின்றன . அவற்றில் நாட்டை , சலநாட்ட , சுத்த நாட்ட , சாயா நாட்பு , மோகன நாட்ட , ஆஹிரி நாட்ட முதலியவற்றை கூறலாம் . முதன்முதலாக தோன்றியிருக்கக் கூடிய ஒளடவ ராகம் இதுவாகும் . இதுவே கம்பீர நாட்டையாகவும் , பழந்தமிழ் பண்ணில் நட்டபாடை என்ற பண்ணாகவும் பொலிவுற்று விளங்கியுள்ளது.

நாட்டை இராக சிறப்பம்சங்கள்

●தோற்றம்

கி.பி 16ம் நூற்றாண்டு முதலே அதாவது ராமாமாத்யர் காலம் முதற்கொண்டே சாதாரண காந்தாரமே சில இராகங்களில் ஷட்சுருதி ரிஷபமாகவும் , கைசிகி நிஷாதமே ஷட்சுருதி தைவதமாகவும் விளங்கின . இப்படியாக ஷட்சுருதி , ரிஷப ஷட்சுருதி தைவதங்களுடன் நாட்டை இராகம் தோற்றம் அளித்தது . அதுவே சுத்த நாட்ட என்றும் சுத்த நாட்டி என்றும் அறியப்பட்டன.

ராமமாத்யர் சுத்த நாட்ட என்கிறார் . துளஜா மகாராஜா தன்னுடைய ' சங்கீத சாராம்ருதத்தில் ' சுத்த நாட்டி என்கிறார். நாட்ட என்ற இராகப் பெயர் இசை வரலாற்றின் இடைக்காலம் முதற்கொண்டே வழக்கத்தில் இருந்திருக்கின்றது . இராகங்களை ஜனக . ஜன்னிய பாகுபாட்டிற்கு உட்படுத்திய காலம் முதல் நாட்டராகம் ஜனக ராக ஸ்தானத்தை வகித்தது. பிற்பாடு மேளமாகவும் கருதப்படலாயிற்று . கி . பி 16ம் நூற்றாண்டுகளில் தோன்றிய தாள்ளப்பாக்க அண்ணமாச்சாரியாருடைய சங்கீர்த்தனங்களுக்கு கொடுக்கப்பட்ட இராகங்களில் நாட்டை இராகம் வெகுவாகக் காணப்படுகிறது.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.