நரிவிருத்தம்
நரிவிருத்தம் என்பது நிலையாமை கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும். இது 6-7 ம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்டது. "திருஞான சம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைக் குறிப்பிடுகிறார்: எலி விருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம்", இவற்றுள் நரிவிருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது.[1]
எடுத்துக்காட்டுப் பாடல்
- இளமையும் வனப்பு நில்லா இன்பமும் நின்ற அல்ல
- வளமையும் வலிதுநில்லா வாழ்வுநாள் நின்ற அல்ல
- களிமகள் நேசம் நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வர்
- அளவிலா அறத்தின் மிக்க யாதும் மற்(று)இல்லை மாதோ
-நரிவிருத்தம் 15
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- நரிவிருத்தம் - மதுரைத் திட்டம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.