தோப்பூர் (திருகோணமலை)

தோப்பூர், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 16 கிமீ தொலைவிலுள்ள தோப்பூர் பிரதேசம் ஏழு கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 39.9 எக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இவ்வூரில் தென்னை அதிகமாக காணப்பட்டதால் தோப்பு எனவும் பின்னர் இப்பெயர் திரிபடைந்து தோப்பூர் எனவும் அழைக்கப்பட்டது. தோப்பூர் நிறைய வயல்களையும் சிறிய குளமான நாவற்கேணியையும் கொண்டுள்ள அழகிய ஊராக விளங்குகிறது.

இங்கு பிறந்து புகழ் பெற்றோர்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.