தொழிற் பாடல்கள்
தொழிற்பாடல்கள் என்பது நாட்டார் பாடல்களில் ஒன்றாகும்பொதுவாகத் தொழில்புரியும் போது பாடும் பாடல்களைத் தொழில் பாடல்கள் என்பர்.தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்கப் பாடுகின்றனர்.தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும் நெஞ்சக் குமுறல்களையும் ஆசாபாசங்களையும் விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.
தொழில் பாடல்கள் சில குறியீடுகளுடன்தொடங்குகின்றன..விவசாயப் பாடல்களில் ஏலேலோக் குயிலே,ஏலேலே அன்னக்கிளி,ஏலேலோ குயிலே, பொலி பொலி பொலி என்றும் கப்பற் பாட்டுகளில் ஏலேலோ ஐலசா,ஏலை ஏலோ சல சலா என்றும் பாரந்துாக்குவோர்கள் ஐலசா ஐலசா,ஏலம் பிடி ஏலம் என்றும் வண்டியோட்டுவோர் ஏலங்கிடிலேலோ என்றும் பாடுவர்.தொழிற் பாடல்களில் தொழிலுக்கு அடுத்தபடியாகக் காதல் இடம் பெறுவதுண்டு.வழிபாடுகளும் புராணக்கூறுகளும் இடம்பெறுகின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.