தெரிநிலை வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று என்பது செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும்.

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

இதில்

  • கயல்விழி என்பது வினையை செய்யும் கருத்தா
  • தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று. இச்சொல்லிலிருந்து,
செய்பவன் - கயல்விழி
கருவி - நார், பூ, கை
நிலம் - அவள் இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் - மாலை

ஆகியவற்றை அறியலாம்.

இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தை தெளிவாகக் காட்டும்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.