தூசுப்படலம்
பூமியைச் சுற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள் . மத்திய ஆப்பிரிக்கா பிரேசில் தென்கிழக்கு ஆசியா ஆகிய நிலப்பகுதிகளுக்கு மேலாகநீல நிறத்தில் தூசுப்படலம் ஒன்று அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதே போல பழுப்ப நிறத்தில் தூசுப்படலம் ஒன்று இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகள் சினா மேற்கு ஆசிய நாடுகள் ஆப்பிரிக்கவின் சில பகுதிகள் ஆகியவற்றின் மீது படர்ந்திருப்பதாகவும் அவர்கள் மேலும்தெரிவிக்கிறார்கள் விவசாய த்தின்போது உண்டாகும் கழிவுப்பொருள்களை எரிப்பதாலும் காடுகளை அழிப்பதாலும் இம்மாதிரியான தூசுப்படலங்கள்பூமியின் மீதுபடரக்காரணமாகின்றன. பசுமைக். காடுகளைஎரிப்பதாலும்கிராமங்களில் விவசாயக்கழிவுப் பொருள்களைஎரிப்பதாலும்வெளிப்படும்மாசுகளின் அளவு. நகரங்களில் தொழிற்சாலை கள்மூலம்வெளிப்படும் மாசுகளின் அளவுக்குச்சமமானது என்றுபுதிதாக ஆராய்ந்தறிந்த செய்திகள். கூறுகின்றன. உலகத்தில் 2000 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. இங்கு விளையும் தாவரக் கழிவுகள் அவ்வப்போது எரித்து சாம்பலாக்கப்படுகின்றன. ஓர்ஆண்டுக்கு இவ்வாறாக 6,000மில்லியன் டன் எடையானவிவசாயக் கழிவுகளும்பிற தாவரங்களும் எரியவிடப்படுகின்றன . இவற்றிலிருந்து வெளிப்படும் புகைதான் தூசுப்படலமாக மண்டலத்தில் மிதக்கிறது. [[