தில்லைக் கலம்பகம்

தில்லைக் கலம்பகம் [1] என்னும் சிற்றிலக்கியம் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர் பாடிய நூல்களில் ஒன்று, இவர்கள் திரு ஆமாத்தூர்க் கலம்பகம் என்னும் கலம்பக நூலும் பாடியுள்ளனர். தில்லைக் கலம்பகம் தில்லையில் குடிகொண்டுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பட்டது. காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் இதில் உள்ளன.

சிவபெருமான் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலம், நடனமாடிய சபைகள் முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. மற்ற தலங்களுக்கு உரிய பூசாபத்ததி [2] காமிகாகமம் [3]. இத் தலத்துக்கு உரிய பத்ததி மகுடாகமம் [4] [5] தில்லையின் நான்கு கோபுரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. [6]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 24.
  2. கும்பம், பிடித்து வைத்த பிள்ளையார், தெய்வச் சிலைகள் முதலானவற்றை வழிபடுவது
  3. காமிக ஆகமம் - அருள் வேண்டும் வழிபாடு
  4. மகுட ஆகமம் - ஆகாயமாகிய விண்ணுலக மகுடத்தை வேண்டும் வழிபாடு.
  5. இதனை இக் கலம்பகத்தில் உள்ள 65 ஆம் பாடல் குறிப்பிடுகிறது
  6. இந்த 4 கோபுரங்களும் வெவ்வேறு காலத்தில் கட்டப்பட்டவை. இக் கலம்பகம் பாடப்பட்ட காலத்தில் அவை கட்டி முடிக்கப்பட்டிருந்தன
  7. எனக்கு நீ ஒரு துரை அலவோ இனி
    உமக்கு நான் ஒரு பயல் அலவோ தயவு - இலையோதான்
  8. அங்குசப் பையல் யான்
  9. பெருங்கப்பல் கடல் மீனுடன் தந்து இக் கரை சேர் பெரும்பற்றப் புலியூரே
  10. கப்பல் பிழைத்துக் கரை காணுமாப் போல
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.