திருவெங்கைக்கோவை

சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறனுள் கோவை இலக்கியமும் ஒன்று.மாணிக்க வாசகரின் திருக்கோவையார் இராசாக்கோவை என அழைக்கப்படுவது போன்று மந்திரிக்கோவை என அழைக்கப்படும் பெருமைக்குரியது திருவெங்கைக்கோவையாகும்.இந்நூலை இயற்றியவர் கற்பனைக்களஞ்சியம் எனப் போற்றப்பெரும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் ஆவார்.

நூலமைப்பு

இந்நூல் களவியல்,வரைவியல்,கற்பியல் என மூன்று இயல்களையும் 425 செய்யுள்களையும் கொண்டுள்ளது.களவியல் பதினேழு தலைப்புகளில் 283 பாடல்களையும் வரைவியல் 8 தலைப்புகளில் 185 பாடல்களையும் கற்பியல்7 தலைப்புகளில் 57 பாடல்களையும் பெற்று இலங்குகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.