தாயுமானவர் (திரைப்படம்)

தாயுமானவர் (Thayumanavar) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர். பி. நரசிம்ம ராவ் இசையமைப்பில் பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன்.[1]

தாயுமானவர்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புஜெயபாரதி பிலிம் கம்பனி
கதைடி. ஆர். செட்டியார்
இசைபிங்கல நரசிம்ம ராவ்
நடிப்புஎம். எம். தண்டபாணி தேசிகர்
சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
பி. ஜி. வெங்கடேசன்
எம். எஸ். தேவசேனா
பி. சாரதாம்பாள்
என். எஸ். ரத்னாம்பாள்
பி. எஸ். ஞானம்
ஒளிப்பதிவுபி. கே. கிருஷ்ண ஐயர்
வெளியீடுதிசம்பர் 31, 1938
ஓட்டம்.
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

முத்துக்கிருஷ்ண நாயக்கர் திருச்சிராப்பள்ளியை ஆண்டு வருபவர். ஒரு நாள் வேதாரண்யம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே தர்மாதிகாரி இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். அதனால் மனம் மகிழ்ந்து அவரை தனது அமைச்சராக்குகிறார். அந்த அமைச்சருக்கு தாயுமானவன் என்ற மகன் இருக்கிறார். முத்துகிருஷ்ண நாயக்கர் இறந்த பின்னர் அவரது மகன் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தாயுமானவனை தனது அமைச்சராக்கிக் கொள்கிறார். தாயுமானவன் மிகுந்த அறிவாளியாகத் திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சியில் அரசனுக்கு உறுதுணையாக உள்ளார். அவர் தத்துவத்திலும், ஆன்மீகத்திலும் மிக ஈடுபாடு கொண்டிருந்தார். தாயுமானவரது சக்தியை உணர்த்த அரசன் விரைவில் அவரைப் பின்பற்றும் சீடராக மாறுகிறார். தன்னுடைய ஆற்றலால் பல அற்புதங்களை நடத்திய தாயுமானவன் காலப்போக்கில் மரணத்தைத் வென்று துறவியாகிறார்

நடிகர்கள்

தி இந்து நாளிதழ் தொகுப்பிலிருந்தும் ,பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டது.

  • எம். எம். தண்டபாணி தேசிகர்
  • எம். எஸ். தேவசேனா
  • இ எஸ். செல்வரத்னம் பிள்ளை
  • பி. சாரதாம்பாள்
  • டி. இ. கிருஷ்ணமாச்சாரி (டிஇகே)
  • என். எஸ். ரத்னாம்பாள்
  • பி. தி வெங்கடேசன்
  • பி. எஸ். ஞானம்

தயாரிப்பு

1930 களின் போது பல படங்களில் ஞானிகளின் வாழ்க்கைக் கதைகள் இடம்பெற்றன. எம்.எம்.தண்டபானி தேசிகர் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்றிருந்ததாலும், மதம் சம்பந்தமான அறிவு கொண்டவரென்பாதாலும் தயாரிப்பாளர்களின் வெளிப்படையான தேர்வாக இருந்தார். முன்னதாக பட்டினத்தார் அதற்குப் பின்னர் நந்தனார் போன்றவை இவர் நடித்திருந்த படங்களாகும்

ஒலித்தொகுப்பு

பிங்கல நரசிம்ம ராவ் இசையமைத்திருந்தார். பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியுள்ளார். 1,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எம்.எம்.தண்டபானி தேசிகர் இந்த படத்தில் இடம் பெற்ற 31 பாடல்களில் பெரும்பாலானவற்றை பாடியிருந்தார்

படம் இழப்பு

இந்த படத்தின் அச்சு தற்போது இல்லை என அறியப்படுகிறது.

வரவேற்பு

திரைப்பட வரலாற்று ஆசிரியர் ராண்டார் கை இந்த படம் "தண்டபாணி தேசிகரின் சிறந்த பாடல்களுக்காகவும் மற்றும் புனித இடங்களைக் கொண்ட காட்சிகளுக்காகவும் எப்பொழுதும் நமது நினைவிலிருக்கும் என 2012இல் எழுதுகிறார்."

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-08. http://archive.is/u4KJW.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.