தாண்டவராயர்

தாண்டவராயர் கைவல்ய நவநீதம் என்னும் வேதாந்த மெய்யியல் தமிழ் நூல் எழுதியவர். ’தாண்டவமூர்த்தி’ என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் கி. பி. 1500 களில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார். இவர் நன்னிலம் நாராயண தேசிகரின் மாணவராகவும் அறியப்படுகிறார். வடமொழியில் (சமஸ்கிருதம்) நல்ல தேர்ச்சி பெற்றதனால் வடமொழியிலுள்ள வேதாந்த மெய்யியல் நூல்களின் கருத்துருக்களை தமிழில் செய்யுள் வடிவில் எழுதியவர்.[1]

இவற்றையும் பார்க்கவும்

சான்றாவணம்

  1. வித்வான் M. நாராயண வேலுப்பிள்ளை - முல்லை நிலையம் - சென்னை 17. முதல் பதிப்பு - 2002-மறுபதிப்பு 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.