தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்
இலங்கையில் இடம்பெறும் தமிழருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டித்தும், தமிழர்களின் உரிமை - சுயநிர்ணய போராடாத்தை ஆதரித்து பல்வேறு தமிழ்நாட்டு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களின் பெரும்பாலனவர்கள் இலங்கை அரசின் பேரினவாத வன்முறைக் கொடுமைகளுக்கு எதிரானவர்கள் எனினும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக இராணுவ பொருளாதர உதவிகளை வளங்குவது இங்கு குறிக்கத்தக்கது.
ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு எதிராகவும் பல தமிழகத் தலைவர்கள் போராட்டம் தொடங்கியக் காலங்களின் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். அன்மையில் இலங்கையின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தமிழ் இனவழிப்பு அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. தமிழீழத் தனியரசுக்கான ஆதரவு நிலையும் தோன்றியுள்ளது. வே. பிரபாகரனின் நிழல்படங்களையும் புலிக்கொடிகளையும் போராட்டங்களின் போது பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
- 2009 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்
போராட்டங்கள்
- பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்
- விடுதலைச் சிறுத்தைகள் - கருத்துச் சுந்ததிரப் போராட்டம்
- பெரியார் திராவிடர் கழகம் புதுதில்லியில் ஜனவரி 2008 இலங்கை அரசுக்கு இந்திய இராணுவ உதவியை நிறுத்தக் கோரி போராட்டம்.
வெளியிணைப்புகள்
- முல்லைத்தீவை நோக்கி படகில் பயணம் செய்த 14 வழக்கறிஞர்களும் கடலோர காவல்படையால் கைது
- மக்கள் எழுச்சியோடு நடைபெற்ற வீரத்திருமகன் சீர்காழி இரவிச்சந்திரன் இறுதி ஊர்வலம்
- கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஈழத்தமிழர் இன அழிப்பைக்கண்டித்து உண்ணாநிலைப்போராட்டம்.
- ஈழத் தமிழருக்காக இன்று கறுப்பு கொடி ஏந்தி பேரணி: ராமதாஸ், திருமா, வைகோ, தா.பா பங்கேற்பு