தமிழினி பதிப்பகம்

தமிழினி பதிப்பகம் சென்னையில் உள்ள நூல்வெளியீட்டகம். வசந்தகுமார் இதை நடத்தி வருகிறார். தமிழினி பதிப்பகம் சார்பில் தமிழினி என்ற முக்கியமான மாத இதழும் வெளிவருகிறது. தமிழினி பழந்தமிழ் ஆய்வுகள், தத்துவ ஆய்வுகள், சிற்பக்கலை கட்டுரைகள், சூழியலாய்வுகள் ஆகியவற்றை வெளியிட்டுவரும் இதழாகும். கரு ஆறுமுகத்தமிழன் இதன் ஆசிரியர். இவ்விதழில் பாதசாரி, ராமச்சந்திரன், குமரிமைந்தன், பாமயன், அ.கா.பெருமாள், ராமகி, செந்தீ நடராசன் போன்ற அறிஞர்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்கள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.