தனியுடைமை
தனியுரிமைத் தொழில் (Sole proprietorship)'(தனியார் சொத்து, தனிவியாபாரம்) என்பது ஒரு தொழில் தோற்றுவித்து நடத்தும் முறைமை ஆகும். இங்கு தனிஒருவரினால் மூலதனம் இடப்பட்டு இலாப நட்டங்கள் போன்ற விளைவுகளை அவரே ஏற்கவேண்டி இருப்பதுடன் வியாபாரத்தின் முகாமைக்கும் ( தொழில் நடத்துதலின் மேலாண்மைக்கும்) அவரே பொறுப்பாளியாகவும் காணப்படுவார். இவ் வியாபார (தொழில்) அமைப்பில் உரிமையாளரை நிறுவனத்திலிருந்து வேறாக பிரிக்கமுடியாது. நிறுவனத்தின் பெயரில் காணப்படும் கடன்கள் உரிமையாளரின் கடனாகக் கருதப்படும்.இலங்கை, இந்தியா போன்ற வளர்நிலை நாடுகளில் இத்தகைய தனியுடைமை வியாபார (தொழில்) நிறுவன அமைப்பே அதிகளவில் காணப்படுகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.