டிக்கம்சா

டிக்கம்சா (Tecumseh, மார்ச் 1768 - ஒக்டோபர் 5, 1813) அமெரிக்கப் பழங்குடி மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவர். ஐரோப்பியர்கள் கிழக்கு அமெரிக்காவை ஆக்கிரம்பிப்பதற்கு எதிராக மிகப் பலமான பழங்குடி மக்களின் கூட்டு எதிர்ப்பை இவர் ஒருங்கிணைத்தார். இவர் தாம் இந்த நிலத்தை பொதுவில் வைத்திருப்பதாகவும், ஒரு நபரோ அல்லது குலமோ இந்த நிலத்தை பிறரின் இணக்கம் இல்லாமல் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வாதிட்டார். இறுதியில் இவர் தோற்றார் எனினும் இவரதும் எதிர்ப்பும், இவரது கருத்துக்களும் இன்றும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

டிக்கம்சா
Tecumseh
பிறப்புமார்ச் 1768
ஒகையோ
இறப்புஅக்டோபர் 5, 1813(1813-10-05) (அகவை 45)
தேசியம்Shawnee
மற்ற பெயர்கள்டெக்கம்தா, டெக்கம்தி
அறியப்படுவதுடிக்கம்சாவின் போர், 1812 போர்

டிக்கம்சாவின் போர்

செவ்விந்திய தலைவர்களின் கருத்துகள்


புஷ்மடாஹா (இடது) டிக்கம்சா (வலது).

"..செவ்விந்தியர்களும் அமெரிக்கர்களும் இணக்கமான நட்புணர்வோடு இருசாரரும் பயன்பெரும் விதத்தில் வாழ முடியும்.."புஷ்மடாஹா, 1811 [1]
"..பலம்வாய்ந்த நமது பழங்குடி மக்கள் எங்கே? வெள்ளையர்களின் அடக்குமுறையில் அவர்கள் மறைந்து விட்டனர்..இனியும் உறக்கம் வேண்டாம்.." டிக்கம்சா,1811 [2]

மேற்கோள்கள்

  1. William R. Carmack (1979). Indian Oratory: A Collection of Famous Speeches by Noted Indian Chieftains. University of Oklahoma Press. பக். 73. http://books.google.com/books?id=eVoJgTzCyRYC&pg=PA73.
  2. Turner III, Frederick (1978) [1973]. "Poetry and Oratory". The Portable North American Indian Reader. Penguin Book. பக். 246–247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-015077-3.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.