டி. வி. சாம்பசிவம் பிள்ளை
டி. வி. சாம்பசிவம் பிள்ளை தமிழின் முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர்.[1] டி. வி. என்ற ஆங்கில முதலெழுத்துக்கள் தஞ்சாவூர் வில்வையா மன்னையார் என்ற அவரது தந்தை பெயரைக் குறிக்கின்றன. பெங்களூரில் 1880-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார்.[2] சாம்பசிவத்தின் மருத்துவப் பின்னணி குறித்து முழுதும் தெரிந்திலது. இவர் காவல்துறையில் எழுத்தராய்ப் பணி தொடங்கி காவல்துறை ஓய்வாளராய்ப் பணி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science என்ற அகராதி இவர் இறப்புக்குப் பின்னர் 4000 பக்கங்கள் உடைய தொகுதியாய் வெளியானது. இதில் 80,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன.[3] 1953-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தனது 73-வது வயதில் சாம்பசிவம் பிள்ளை மறைந்தார்.[2]
டி. வி. சாம்பசிவம் பிள்ளை | |
---|---|
![]() | |
பிறப்பு | 19 செப்டம்பர் 1880 பெங்களூர் |
இறப்பு | 12 நவம்பர் 1953 |
மேற்கோள்கள்
- "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்த்த நாள் May 01, 2012.
- "சித்த மருத்துவத்துக்கு பெரும் பங்காற்றிய மறைந்த டி.வி.சாம்பசிவம் பிள்ளை படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை : பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார்" (ta).
- ஆ. இரா. வேங்கடாசலாபதி (ஜனவரி 2007). "மருத்துவ அகராதி தந்த மேதை ஒரு துன்பியல் நாடகம்". காலச்சுவடு (85).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.