டி. பி. பூனாட்சி

டி. பி. பூனாட்சி (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நெய்வேலி எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது அ.இ.அ.தி.மு.கவில் திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.[1], [2]

குடும்பம்

இவருக்கு பாலம்மாள் என்கிற மனைவியும், பிரபாகர், அருண்குமார் ஆகிய இரண்டு மகன்கள், ஜெயந்தி என்கிற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.