டான் குய்க்ஸோட்

டான் குய்க்ஸோட்(Don Quixote) மிகுவல் டெ செர்வான்டெஸ் என்ற இசுப்பானிய ஆசிரியர் எழுதிய நாவலாகும். 1605 மற்றும் 1615 ஆண்டுகளில் இரு பாகங்களாக வந்த இந்த நாவலே நவீன இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. லா மான்ச்சாவைச் சேர்ந்த டான் குய்ஸோட் என்ற நபர், தாம் படித்த மாண்மை (chivalry) குறித்த புத்தகங்களின் அடிப்படையில் தம்மை ஓர் வீரராக (knight) உருவகித்துக்கொண்டு வீரமாகக் காப்பாற்றும் நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடன் கூறும் நாவலாகும். அவரை அவரது உயிர் நண்பர் வரை அனைவரும் கலாய்ப்பதுவே நாவலின் மையமாகும். இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தாமஸ் ஷெல்டன் ஆவார்.

டான் குய்க்ஸோட் மற்றும் அவர் உதவியாளர், சாஞ்சோ பான்சா - குஸ்டோவ் டோரெயின் வரியோவியம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.