சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் உறையூர். இவன் காலத்தில் கருவூரில் இருந்துகொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை சோழன் சேரனைக் காணக் கருவூர் வந்தான். சேரனின் வேல் வீரர்கள் நட்புக்காக வந்துள்ளமை அறியாது தாக்கினர். சோழன் மார்பில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அம்புகள் சிதைத்தன. சோழனின் பட்டத்து யானை படைக்கடலின் நடுவே நாவாய்க்கப்பல் போலவும், வான மீன்கூட்டத்துக்கு இடையே நிலா போலவும், வந்துகொண்டிருந்தது. நாவாயைத் தாக்கும் சுறாமீன் கூட்டம் போல வாள்வீரர்கள் யானையைச் சூழ்ந்து மொய்த்தனர். அதனால் சோழனின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. யானைமீதிருந்த சோழனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தக் கோலத்தைக் கருவூர் வேள்மாடத்து இருந்த சேரனும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் கண்டனர். சோழன் துன்பம் இல்லாமல் திரும்ப வேண்டும் எனப் புலவர் வாழ்த்தினார். பாடல் புறநானூறு 13 (இந்த வாழ்த்துதலின் உட்பொருளைச் சேரன் உணர்துகொண்டான். தானே மதயானை முன் சென்று அதனை அடக்கிச் சோழனைக் காப்பாற்றினான்.)

எறிபத்த நாயனார் கதைக்கு மேலே உள்ள வரலாறு ‘கால்’போல் தெரிகிறது.

அடிக்குறிப்பு

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.