சென்லா

சென்லா (Chenla) என்பது கம்போசம் என்ற கம்போடிய நாட்டில் தமிழர் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட அரசாகும். சென்லா அரசு புன்னன் அரசை வீழ்த்தி வந்ததாகும். இந்த அரசு கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது

ஆட்சி

சென்லா அரசு கம்போசம்,லாவோஸ்,தென் தாய்லாந்து வரை பரவியிருந்தது. சென்லா அரசின் தலைநகரமாக இந்திரபுரி விழங்கியது. சென்லா அரசு இடைகாலத்தில் கடலரசு நிலஅரசு என இரண்டாக பிரிந்ததாக சீன வரலாற்று குறிப்புகள் முலம் தெரிகின்றது

வரலாறு

சென்லா அரசு கம்போசத்தின் கடைசி புன்னன் அரசர் செயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது.ருத்திரவர்மனே தலைநகராக இந்திரபுரியை உருவாக்கினார்.இவர் தனது தம்பி குணவர்மனை அதிகார போட்டி காரணமாக கொன்றார்.ருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர் இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்து மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார், இந்த பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டார். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு சாம்ப அரசை வீழ்த்தினர். முதலில் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வளங்கப்பட்டது, சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான். இதன் பின் சென்லா அரசு கடலரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் கடலரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப்படுத்துகின்றன. பீமவர்மன் வழி வந்த கடவேச அரிவர்மனின் நான்காம் மகன் பரமேசுவரவர்மனே தமிழகத்தில் பல்லவன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறப்புக்கு பின்னர் வரிசு இல்லாத காரணத்தால் அமைச்சர்களால் அழைத்து செல்லப்பட்டு நந்திவர்மன் என்ற பெயரில் அரசன் ஆனான். கடவேச அரிவர்மனின் மகன்கள் விஜய அரசு உடணான போரில் இறக்க கடலரசு அரசர் சந்திரவர்னின் மகன் முதலாம் செயவர்மன் நாட்டை ஒன்றாக இணைத்து ஆண்டார். முதலாம் செயவர்மனின் மருமகன் பரமேசுவர்மனே இரண்டாம் செயவர்மன் என்ற பெயர் கொண்டு கெமர் அரசை நிறுவி சென்லா அரசை வீழ்த்தினர்.

அரசர்கள்

ருத்திரவர்மன் (கிபி 525-575)

நில அரசு

  • பீமவர்மன் (கிபி 575-605)
  • புத்தவர்மன் (கிபி 605-638)
  • ஆதித்யவர்மன் (கிபி 638-650)
  • இராண்யவர்மன் (கிபி 650-678)
  • கோவிந்தவர்மன் (கிபி 678-705)
  • செயவர்மன் (கிபி 705-764)
  • கடவேச அரிவர்மனின் (கிபி 764-780) (இவர் தன் நான்காம் மகன் பரமேசுவரவர்மனை தமிழகத்தில் ஆண்டு வந்த பல்லவருக்கு வரிசு இல்லாத காரணத்திற்காக அனுப்பிவைத்தார்)

கடலரசு

  • குணவர்மன் (அரசர் அல்ல)
  • வீரவர்மன் (அரசர் அல்ல)
  • மகேந்திரவர்மன் ( கிபி 600-640)
  • முதலாம் ஈசானவர்மன் ( கிபி 640-657)
  • இரண்டாம் மகேந்திரன் ( கிபி 657-670)
  • இரண்டாம் ஈசானவர்மன் ( கிபி 670-708)
  • இரண்டாம் பீமவர்மன் ( கிபி 708-748)
  • சந்திரவர்மன் ( கிபி 748-785)
  • முதலாம் செயவர்மன் ( கிபி 785-802)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.