செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்)
செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் என்னும் நூல் மு. தமிழ்க் குடிமகனால் எழுதப்பட்ட நூலாகும்.
செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (நூல்) | |
---|---|
ஆசிரியர்(கள்): | தமிழ்க்குடிமகன் |
வகை: | வரலாறு |
துறை: | வரலாறு |
இடம்: | மதுரை 1 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 180 |
பதிப்பகர்: | அறிவொளி பதிப்பகம் |
பதிப்பு: | முதற் பதிப்பு - 20.9.1983 |
வரலாறு
ஈழச் சிக்கல் குறித்து மாலை முரசு மாலை நாளிதழில் 11.8.83 தொடங்கி 4.9.83வரை எழுதி கட்டுரைத் தொடராக வெளிவந்து பிறகு நூலாக வெளியிடப்பட்டது.
அமைப்பு
இந்நூலில் இலங்கையின் மூத்த குடிகளான ஈழத்தமிழரின் பழைய வரலாறு, சிங்களருக்கும தமிழருக்கும் ஏற்பட்ட முறுகல்கள், இனப்படுகொலைகள், ஈழப்போராட்டம் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
உசாத்துணை
- செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் முதற் பதிப்பு 20.9.1983, அறிவொளி பதிப்பகம், 338, வடக்கு மாசி வீதி, மதுரை-1
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.