சுரதா யாழ்வாணன்

சுரதா யாழ்வாணன் தமிழ் கணித்துறைக்கு பங்களித்துவரும் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழில் தட்டச்ச விரும்புவோர் வசதிக்காக பல்வேறு வகையான நிரல்களை எழுதி உள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம், தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு ( UNICODE ) மாற்றும் பொங்குதமிழ் செயலி ஒருங்குறியில் வலைப்பதிபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் ( Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் இவரது செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

சுரதா ஈழத்து எழுத்தாளரான காலஞ்சென்ற யாழ்வாணனின் மகனும் ஒலிபரப்பாளர் யாழ் சுதாகரின் சகோதரரும் ஆவார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.