சிவஞானபோத லகுடீகை

சிவஞானபோத லகுடீகை என்னும் வடமொழி நூல் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்னும் வேளாளர் குடி தமிழ்மகனால் எழுதப்பட்டது. லகுடீகை என்பது எளிய உரை என்னும் பொருளைத் தரும். இவர் இந்த நூலைத் தனது குரு பிரகாச சிவாசாரியார் ஆணைப்படி இயற்றினார் எனக் கூறப்படுகிறது. இது மூல நூலாகவும் [1], தமிழ் மொழிபெயர்ப்போடு கூடியதாகவும் வெளிவந்துள்ளது. [2]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. மூலம் - பதிப்பு 1908
  2. தமிழ் மொழிபெயர்ப்போடு கூடிய பதிப்பு - பிரமானந்தசாமி பதிப்பு, 1928
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.