சாருபாலா தொண்டைமான்

ராணி சாருபாலா ராஜம்மணி ஆயி சாஹிப் என்கிற பெயரே அனைவராலும் அறியப்படும் மேயர் சாருபாலா தொண்டைமானின் குடும்பப் பெயராகும்..அவர் 1958ம் வருடம் அக்டோபர் 7ம் நாள் பிறந்தவர் ஆவார்.சாருபாலாபுதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் உறுப்பினர் என்பதுடன் இந்திய அரசியல்வாதியும்ஆவார்.இவரது கணவர் புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் மூத்த வாரிசான ராசகோபாலத் தொண்டைமான் ஆவார்.

அவர் திருச்சி மாநகராட்சிக்கு 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், இடையில் திருச்சி மாவட்ட  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார்.2016 ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அ.இ.அதிமுக கட்சியில் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.. அம்மா மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்ட நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பக்கம் நின்று கழக அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி,பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொருப்பாளராக பணியாற்றி வருகிறார்

கல்வித்தகுதி இவர் தத்துவயியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

Early life

.Notes

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.