சம்சாரி (திரைப்படம்)
சம்சாரி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம்.
சம்சாரி | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணரத்தினம் |
தயாரிப்பு | யூப்பிட்டர் பிலிம்ஸ் |
கதை | காவை சதாசிவம் |
இசை | நடராஜ ஆச்சாரி |
நடிப்பு | காவை சதாசிவம், பி. டி. ராம், புதுக்கோட்டை எஸ். ருக்மணி, விகடகவி மாரியப்பா, டி. கே. ரஞ்சிதம், கே. வரலட்சுமி, கே. ராஜலட்சுமி, டி. ஏ. ராஜேசுவரி, எம். நடனம், டி. எஸ். லோகநாதன், பி. எஸ். பி. தொண்டைமான் |
வெளியீடு | 1942 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சம்சாரி என்ற இத்திரைப்படமும், சனியாசி என்ற திரைப்படமும் ஒன்று சேர்க்கப்பட்டு சன்யாசி-சம்சாரி என்ற ஒரு தொகுப்பாக வெளிவந்தன.[1] புதுக்கோட்டையைச் சேர்ந்த யூபிட்டர் பிலிம்சு என்ற நிறுவனம் இதனைத் தயாரித்தது.[1] சம்சாரி திரைக்கதையை காவை சதாசிவம் என்பவர் எழுதினார். அவரே முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார்.[1] நடராஜ ஆச்சாரி இசையமைத்த இத்திரைப்படத்தை எம். கிருஷ்ணரத்தினம் இயக்கியிருந்தார்.[1]
மேற்கோள்கள்
- ராண்டார் கை (22 ஆகத்து 2015). "Sanyasi-Samsari (1942)". தி இந்து. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.