சனாதன சாரதி
சனாதன சாரதி (sanathana sarathi) என்னும் பத்திரிக்கை, உலகின் பல மொழிகளில் வெளிவரும் ஓர் ஆன்மீக மாத இதழாகும். இது ஏறத்தாழ 25 மொழிகளில் வெளிவருகின்றது. தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இருந்து இவ்விதழ் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டுள்ளது. இதனை நிறுவியவர் சத்திய சாயி பாபா தன் கொள்கைகளைப் பரப்ப இவ்விதழ் சரியானதொரு கருவியாய் அவருக்கு விளங்கியது. அவர் இவ்விதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்தார்; இப்பொழுதும், அவரின் சொற்பொழிவுகள் பல தொடர்ந்து இவ்விதழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், உலகின் 168 க்கும் மேலான நாடுகளில் நடமாடும் கோயில்களான மனிதர்க்குத் தொண்டுபுரிந்துவரும் அருள்மிகு சத்தியசாயி சேவா நிறுவனத்தின் தொண்டுப்பணிகள் பற்றிய செய்திகளும் வெளிவருவது இவ்விதழின் தனிச்சிறப்பு.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.