சக்கர வியூகம்
சக்கர வியூகம் அல்லது பத்ம வியூகம் என்பது பழங்கால இந்து சமய போர்முறைகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் வியூகமாகும். இது ஒரு சுழலும் மனித மரண இயந்திரமாக கருதப்படுகிறது.[1] வெவ்வேறு அளவுகளினால் ஆன ஏழு வட்ட சக்கரங்களால் சக்கர வியூகம் அமைக்கப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜூனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார்.

சக்கர வியூகம் அல்லது பத்ம வியூகத்தை காட்டும் ஒரு வரைபடம்
சக்கர வியூகத்தில் நூழையும் அபிமன்யுவை சித்தரிக்கும் ஒரு பாறைச் சிற்பம்.
மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகம் மூன்று முறை அமைக்கப்பட்டதாகவும், இரு முறை அர்ஜூனன் இதை உடைத்து வெற்றிபெற்றதாகவும், ஒரு முறை இந்த சக்கர வியூகத்தினை அபிமன்யூ உடைத்து சென்று, பின்பு வெளியேற தெரியாமல் மாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.