கோதாயிம்பர
கோதாயிம்பர என்பவன் இலங்கையை ஆண்ட காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான். இவன் கிரி என்னும் பிரதேசத்தில் நினெமொல்பிட்டிய என்னும் இடத்தில் பிறந்தான். இவன் ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவான். உருவத்தில் சிறியவனாக இருந்ததால் கோதாய (சிங்கள அர்த்தம்) என்னும் பெயரால் அழைக்கப்பட்டான். இவன் ஒரு சோம்பேறியாவான். ஒரு நாள் சகோதரர்கள் வயலின் ஒரு பகுதியை தவிர மீதிப் பகுதியை சுத்தம் செய்துவிட்டு மீதியை இவனிடம் கொடுத்தனர். இவன் மிக விரைவில் துப்பரவாக்கினான். இதனால் காவன்தீசன் இவனைத் தன் படையில் சேர்த்துக் கொண்டான்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.