கோட்டை பிள்ளைமார்
கோட்டை பிள்ளைமார் அல்லது கோட்டை வெள்ளாளர் என்பவர்கள் பாண்டியர்களுக்கு பட்டம் சூட்டும் பரம்பரை உரிமை கொண்டவர்கள். இவர்கள் வேளிர் கங்கை குலம் சந்திர குல சத்ரியர்கள் ஆவார்கள்
கதை
காமக்கிழத்தியின் மகனான கூத்தனுக்கு பட்டம் கட்ட மறுத்ததாலும் கூத்தன் விரும்பிய தங்கள் சாதிப்பெண்ணை தர மறுத்ததாலும் இனத்தாரோடு அக்னி குண்டத்தில்விழுந்த போது ஐந்துதலை நாகத்தால் காப்பாற்றப்பட்ட சிலரின் வழிவந்தாரே கோட்டைப் பிள்ளைமார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சாதியினர் அழிந்துவிட்டதாக கூறுகின்றனர். அவர்களை குலப்பெண்கள் தீயை தாண்டக்கூடாது என்ற பழக்கம் இருந்ததால் பாண்டியர் கோட்டை எரிந்த போதே அதிலிருந்த அனைவரும் தீயை தாண்டாமல் இறந்து விட்டதாக கூறுகின்றனர்.
மூலம்
- தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.