கோ. பாலசுப்பிரமணியன்
கோ. பாலசுப்பிரமணியன் முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என்ற நிலைகளில் முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.[1] தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 4 அக்டோபர் 2018 அன்று பொறுப்பேற்றுள்ளார்.[2]
பணி
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அயலக ஆய்வாளராகவும், போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[1] திராவிட பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.[3]
ஆய்வுகள்
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூர், கர்நாடகாவில் கோலார் போன்ற எல்லை மாவட்டங்களில் அழியும் நிலையிலிருக்கும் மொழிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். மொழி சந்தித்து வரும் ஆபத்துகளை மதிப்பீடு செய்கின்ற மொழியியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.[1]
கட்டுரைகள், நூல்கள்
தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நான்கு நூல்களை எழுதியுள்ளார்.[3]
மேற்கோள்கள்
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் நியமனம், தினத்தந்தி, 30 செப்டம்பர் 2018
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு, தினமணி, 5 அக்டோபர் 2018
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம், தினமணி, 30 செப்டம்பர் 2018
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.