குணபூஷண சிங்கையாரியன்
குணபூஷண சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்ச அரசர்களுள் ஒருவன். இவன், நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று விளங்கிய மார்த்தாண்ட சிங்கையாரியனின் மகனாவான். நாட்டைக் கல்வி மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையச் செய்ததன் மூலம், தனது தந்தையிலும் அதிகமாக, இவன் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்தான். உறுதியுடனும் நடுநிலைமையாகவும் ஆட்சி செலுத்திய இவன் முதிர்ந்த வயது வரை ஆட்சியில் இருந்தான். முதுமையின் இயலாமை காரணமாக இறக்கும் முன்னரே ஆட்சிப் பொறுப்பைத் தனது மகனான வீரோதய சிங்கையாரியனிடம் ஒப்படைத்தான்.
வெளியிணைப்புக்கள்
- யாழ்ப்பாண வைபவமாலை நூலகம் இணையத் தளத்திலிருந்து.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.