கால்சா

கால்சா (Khalsa, பஞ்சாபி: ਖ਼ਾਲਸਾ) அனைத்து அனுமதிக்கப்பட்ட சீக்கியர்களின் தொகுப்பு அமைப்பாகும்; இதன் பிரதிநிதியாக ஐந்து அன்புக்குரியவை உள்ளன. இதனை குரு பாந்த் (குருவின் பாதை) எனவும்[1] இறுதியான காலத்திற்குமான குரு/சீக்கியர்களின் தலைவர் எனவும் கூறலாம். கால்சா என்ற சொல்லிற்கு "இறைமை/கட்டற்ற" எனப் பொருள்படும்.[2] மற்றொரு மொழிபெயர்ப்பாக "தூய்மை/உண்மையான" எனலாம். [3] மார்ச் 30, 1699இல் பத்தாவது சீக்கிய குரு குரு கோவிந்த் சிங் துவக்கினார். அது முதல் காலத்திற்குமான சீக்கியத் தலைமையாக கால்சா அமைந்தது; "குரு பாந்த்" என பட்டம் வழங்கப்பட்டு ஆன்மீகத் தலைமை குரு கிரந்த் சாகிப்பிற்கு மாற்றப்பட்டது.[4] கால்சா சீக்கிய சமூகத்தின் அனைத்து செயலாக்க, படைத்துறை மற்றும் குடியதிகாரத்திற்கு பொறுப்பானது.[5] கால்சா சீக்கியர்களின் நாடு எனவும் கூறப்படுகின்றது.[6]

துவக்க கால கால்சாவின் அகாலி சீக்கிய வீரர்கள்
சீக்கிய சிற்றரசுகள் காலத்தில் அகாலி தாப்பா சிங், துவக்க கால கால்சா போர்வீரர்

மேற்சான்றுகள்

  1. Singh, Teja (2006). A Short History of the Sikhs: Volume One. Patiala: Punjabi University. பக். 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8173800073.
  2. Gill, Rahuldeep. "Early Development". http://www.patheos.com. Patheos. பார்த்த நாள் 14 April 2013.
  3. Parmjit, Singh (2008). In The Master's Presence The Sikhs of Hazoor Sahib. London, UK: Kashi House. பக். 312.
  4. Singh, I.J.. "Guru Granth & Guru Panth". http://www.chardikalaa.com. The Chardi Kalaa Foundation. பார்த்த நாள் 19 March 2013.
  5. Joseph Davey Cunningham, History of the Sikhs. year = 1849, page = ??
  6. Singh, Kartar (2008). Life of Guru Gobind Singh. Ludhiana, India: Lahore Bookshop. பக். 127.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.