காரணாகமம்
காரணாகமம் வடமொழியில் எழுதப்பட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டில் நான்காவது. இதில் பூர்வ, உத்தர என்ற இரு பகுதிகள் உண்டு. பூர்வ பக்கத்தில் 147 படலங்கள் அமைந்துள்ளன. இதிலே தந்திரங்கைளப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. மூன்று முதல் நூற்றி ஒன்று வரையமைந்த பகுதிகள் கிரியை பற்றி விளக்குகின்றன. இதன் பதினெட்டாம் படலத்தில் எண்பத்தினான்கு செயல்கள் (கரணங்கள்) விளக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.