காமவல்லி
காமவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புதுமைப்பித்தன் கதை, உரையாடல் எழுத, மாணிக்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
காமவல்லி | |
---|---|
இயக்கம் | மாணிக்கம் |
தயாரிப்பு | பாஸ்கர் பிக்சர்ஸ் |
கதை | கதை புதுமைப்பித்தன் ராஜகோபால பாகவதர் |
இசை | சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | நாகர்கோவில் கே. மகாதேவன் டி. எஸ். துரைராஜ் ராஜகோபால பாகவதர் வி. எம். ஏழுமலை சி. டி. கண்ணபிரான் எஸ். வரலட்சுமி சி. கிருஷ்ணவேணி டி. எஸ். ஜெயா அங்கமுத்து |
வெளியீடு | மார்ச்சு 20, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 14560 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தியான சந்திரன் என்ற கவிஞன் தன் மனைவி நந்தினியோடு ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறான். தியான சந்திரனின் புலமையைக் கேள்விபட்ட மன்னன் அவனுக்கு அரசவையில் பதவி தருகிறான். முதியவனான அந்த அரசனின் இளம் மனைவிக்கு தியான சந்திரனின் மீது மோகம் ஏற்படுகிறது. அவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயலும் அரசி அதில் தோல்வியடைகிறாள். இதனால் கோபமுற்ற அரசி தியான சந்திரன் தன்னை வல்லுறவு கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டுகிறாள். தீரவிசாரிக்காத மன்னன் கவிஞனை சிரச்சேதம் செய்ய கட்டளை இடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.[1]
மேற்கோள்கள்
- அறந்தை நாராயணன் (நவம்பர் 24 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-10 சிறுகதை சாம்ராட் புதுமைப்பித்தன்". தினமணி கதிர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.