காந்திமதி கதை
காந்திமதி என்பவள் புரூரவ சரிதை என்னும் தமிழ்க் காப்பியத்தில் வரும் பாத்திரம். திரிகர்த்தன் என்னும் அரசனின் மகள். புரூரவன் இவளை மணந்தான்.
திருச்சி உறையூர் திருஉழக்கீசுரம் கோயிலிலுள்ள அம்மன் பெயர் காந்திமதியம்மை. 19ஆம் நூற்றாண்டில் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் இவள்மீது பாடப்பட்டுள்ளது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இதனைப் பாடினார்.
- நெல்லையில் காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர்
- கும்பகோணத்தில் திருமூக்கீச்சுரம் காந்திமதியம்மை உடனுறை பஞ்சவர்ணீச்சுவரர்
ஆகிய கோயில்கள் குறிப்பிடத்தக்கவை.
ஈர்க்கும் காந்த எண்ணம் என்னும் பொருளைத் தரும் சொல் 'காந்திமதி'
இவற்றையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.