காஞ்சி ஆறு
இது சேரநாட்டு மலையில் பிறந்து சேரநாட்டுக் கடலில் விழுந்தது, இந்த ஆற்றில் ஆண்டுதோறும் விழா நிகழும். இதனைக் காவிரியில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவோடு ஒப்பிடலாம். காஞ்சியாற்று விழாவுக்குத் தீநீர் விழா என்று பெயர். இந்த விழாவின்போது மக்கள் அவ்வாற்றின் கரையிலிருக்கும் பொழிலில் கூடிக் குலவி மகிழ்வர். இந்த மகிழ்ச்சிக்குப் பேரெழில் வாழ்க்கை என்று பெயர். இந்த விழாவில் கூடிச் சமைத்து உண்டு மகிழ்வர்.
காஞ்சி என்பது சேரநாட்டில் பாய்ந்த ஓர் ஆறு
இங்குக் கூடுவோர் மேவரு சுற்றம். மேவரு சுற்றம் என்பது விரும்பும் சுற்றம். இது உற்றார் உறவினர் மட்டுமல்லாமல் நண்பர்களையும் உள்ளடக்கியது.[1]
அடிக்குறிப்பு
-
- நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும்
- மலிபுனல் நிகழ்தரும் தீம்நீர் விழவின்
- பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை
- மேவரு சுற்றமொடு உண்டு, இனிது நுகரும்
- தீம்புனல் ஆயம் ஆடும்
- காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே (வாழிய பெரும) - பதிற்றுப்பத்து 48
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.