களமர்
களமர் என்போர் வயல்வெளிக் களத்தில் போரடித்து வாழும் உழவர் பெருமக்கள். இவர்கள் களத்திலேயே வீடு கட்டிக்கொண்டு வாழ்வர். [1] வேங்கைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வர். [2] அரித்த கள்ளை அருந்துவர் [3] நெல் தூற்றுவர். [4] இவர்கள் கரும்பு வெட்டும்போதும், நெல் அறுக்கும்போதும் இசையுடன் பாடுவர். [5] சேற்று நிலத்தில் உழும்போதும், [6] எருதுகளை ஓட்டும்போதும், [7] இசைகூட்டிப் பாடுவர்.
அடிக்குறிப்பு
- மனைக் களமரொடு களம் என்கோ? (புறநானூறு 387)
- வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் (நற்றிணை 125)
- களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் புறநானூறு 212
- அகநானூறு 366
- அறைக் கரும்பின் அரி நெல்லின் இனக் களமர் இசை பெருக, (பொருநராற்றுப்படை 194)
- அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே, (மதுரைக்காஞ்சி 260, 393)
- எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி, (மலைபடுகடாம் 469)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.