கதிரை மலைப் பள்ளு

கதிரை மலைப் பள்ளு தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பள்ளு வகையைச் சேர்ந்த நூல்.[1] 1915 ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சில் வெளிவந்த இந்நூலின் காலமும் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இது மரபு வழி இலக்கிய அம்சங்களையும் நாட்டார் இலக்கியப் பண்புகளையும் இசைநாடகக் கூறுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது. கதிரையப்பர் பள்ளு எனவும் அழைக்கப்படுகிறது. கதிர்காம முருகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. பள்ளன், பள்ளி, பண்ணைக்காரன், இளையபள்ளி என நான்கு பாத்திரங்கள் உண்டு. சிந்து, விருத்தம் ஆகிய பாவகைகளும் பேச்சு சொல்லும் இந்நூலில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.