கணவிரி
யாப்பிலக்கணத்தில் பாடலின் அடிகளை இருவகைகளில் அலகிடுவர். தொல்காப்பியம் எழுத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அடிகளைக் குறிப்பிடும் முறைகளையும், [4] சீரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அடிகளின் பேரில் பாடலைக் குறிப்பிடும் முறையையும் [5] காட்டுகிறது.
கணவிரி என்பது ஒரு மலரின் பெயர். [1] [2]
வையை ஆற்றில் வந்த மலர்களில் ஒன்று. [3]
யாப்பருங்கலம் என்னும் நூல் கணவிரி என்னும் மலர்பெயரை நாலெழுந்துச் சீருக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது. [6]
பரிபாடல் பல்வகைப் பூக்களோடு இதனையும் ஒன்றிக் குறிப்பிடுகிறது. [7]
மணிமேகலை என்னும் நூல் கணவிரி என்னும் பூவால் கட்டிய மாலையைக் குறிப்பிடுகிறது. [8]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகிய செய்யுள் வாய்பாட்டு மலர்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம்.
- தேமா, புளிமா, பூவிரி, கணவிரி எனச் செய்யுளில் சீருக்கு வாய்பாடு காட்டுவாரும் உண்டு.
- பரிபாடல் 11-20
- தொல்காப்பியம் செய்யுளியல் 35 முதல் 39
- தொல்காப்பியம் செய்யுளியல் 43 முதல் 45
- விளக்கம்
- சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், 20
தாய தோன்றி தீயென மலரா, - பரிபாடல் 11 அடி 20-21 - கணவிரி மாலை கைக்கொண் டென்ன
நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி - மணிமேகலை 5-அடி 48-49
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.