கடுவெளிச் சித்தர்
”கடுவெளி” என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை.[1]
இவர் காஞ்சியில் சமாதியடைந்ததாக கூறுகின்றனர். இவரை பற்றிய வரலாற்றை யாரும் முறையாக அறியவில்லை.
நூல்கள்
- கடுவெளிச் சித்தர் இயற்றிய நூல்கள்
- கடுவெளிச் சித்தர் பாடல்
- ஆனந்தக் களிப்பு
- வாத வைத்தியம்
- பஞ்ச சாத்திரம்
குறிப்புதவி
மேற்கோள்
- "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"- 'கடுவெளிச் சித்தர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.