ஓரேருழவர்

ஓரேருழவர் சங்க கால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும் [1] புறநானூற்றில் ஒரு பாடலும் [2] பாடியுள்ளார்.

பெயர்க்காரணம்

ஓரேருழவர் என்பது இவரின் இயற்பெயரன்று. அஃது இவரின் சிறப்புப் பெயராகும். குறுந்தொகையில் இவர் பாடிய பாடலில் அமைந்துள்ள அழகான உவமையே இவருக்கு இப்பெயரைத் தந்தது.

அவ்வுவமையானது:

பொருள் தேடித் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் வினைமுடிந்து மீண்டு முல்லை நிலம் வழியாக வருகிறான். பெய்த மழையின் ஈரம் காயும் முன் வயலை உழுதுவிட விரைந்து செல்லும் ஒரே ஓர் ஏரை உடைய உழவனைப் போலத் தலைவியைக் காண தலைவனின் உள்ளமும் விரைந்தது.

வெளி இணைப்பு

அடிக்குறிப்பு

  1. குறுந்தொகை 131
  2. புறம் 193 திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக்காஞ்சி. பொருண்மொழி என்பது உலக வாழ்க்கைமுறை, உலகம் கண்ட நீதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.