ஏறைக்கோன்

ஏறை என்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளில் ஒன்று.

ஏறைக்கோன் சிறந்த போர்வீரன். குறமகள் இளவெயினி என்னும் பெண்பாற்புலவர் ஏறைக்கோன் வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இந்தப் பாடலில் இவனது வள்ளண்மை கூறப்படவில்லை. என்றாலும் பாராட்டிய புலவரை இவன் பேணியிருக்கலாம்.

'பெருங்கல் நாடன்' என இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.

இவனது நான்கு பண்புகள் பாடலில் சுட்டபடுகின்றன.

  1. இவனைச் சேர்ந்தவர்கள் இவனுக்குத் தீங்கிழைத்தால் அதனை அவன் பொறுத்துக்கொள்வானாம்.
  2. பிறர் தவறு செந்தால் அதற்காகத் தான் நாணுவானாம்.
  3. தான் போரிடும் படைக்குப் பழி வாராமல் போரிடும் வல்லமை பெற்றவனாம்.
  4. வேந்தன் அவையில் பீடுடன் வீரநடை போடுவானாம்.

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 157
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.