ஏகாம்பரகுப்பம்

ஏகாம்பரகுப்பம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய ஊர் ஆகும். இது நகரி மண்டலத்துக்கு உட்பட்டது.[1]

அமைவிடம்

இது ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் தமிழகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது நகரியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், திருப்பதியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், திருத்தணியில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், நாகலாபுரத்தில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நிலப்பரப்பு

போக்குவரத்து

ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் தொடர்வண்டிகள் ஏகாம்பரக்குப்பத்தின் வழியாக செல்கின்றன.

மக்கள்

இது ஆந்திர மாநிலத்திலுள்ள தமிழ் பேசும் மக்களை கொண்ட ஊர். இங்கு வாழும் மக்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்.

அரசியல்

பொருளாதாரம்

இங்கு வாழும் மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். நூற்பாலைகளும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன.

அலுவலகங்கள்

சான்றுகள்

  1. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும், மண்டல வாரியாக ஊர்களும் - ஆந்திரப் பிரதேச அரசு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.