எர்ணஸ்ட் மாயர்

எர்ணஸ்ட் வால்டெர் மாயர் 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல், பறவையியல், அறிவியல் வரலாறு, இயற்கையியல் என பரந்து விரிந்தது. இவரது படிமலர்ச்சியியல் ஆராய்ச்சிகள் "தற்கால படிமலர்ச்சியியல்" கோட்பாடுகளுக்கு வழிவகுத்து, பின் "உயிரியல் சிற்றின கோட்பாட்டு" வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

எர்ணஸ்ட் மாயர்
எர்ணஸ்ட் மாயர்
பிறப்புசூலை 5, 1904
கெம்டென், செர்மனி
இறப்புபெப்ரவரி 3, 2005
பெட்ஃபொர்டு, மாசசூசெட்ஸ்,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம் செர்மனி
துறைபடிமலர்ச்சி உயிரியல்

"சிற்றினத் தோற்றம்" குறித்து புதிய பார்வையை உருவாக்கியவர்.

நோபல் பரிசுக்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் கிராஃபோர்டு பரிசு இவருக்கும், ஜான் மேநார்டு சுமித், ஜார்ஜ் சி. வில்லியம்சு ஆகியோருடன் இணைந்து (படிமலர்ச்சி உயிரியல் கருத்தை உருவாக்கல் பணிக்காக) வழங்கப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.