எரிமலை (சஞ்சிகை)

எரிமலை என்பது புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டு முகமாகத் தொடக்கப்பட்ட சஞ்சிகை. இது விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு அவர்கள் லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவரால் ஆரம்பிக்கப்பட்டது.

எரிமலை
இதழாசிரியர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
துறை [[]]
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ்
இறுதி இதழ்
இதழ்கள் தொகை
வெளியீட்டு நிறுவனம் தாய் மண் வெளியீடு
நாடு இலண்டன், பிரான்சு
வலைப்பக்கம் []

இச் சஞ்சிகை விடுதலை வேட்கை மிக்க எழுச்சிப் படைப்புகளுடனும், ஒடுக்குமுறைக்கு எதிரான ஆவேசக் குரல்களுடனும்,போர்க்கால இலக்கியத்தின் யதார்த்தப் பதிவுளுடனும், மண்ணின் மணத்தோடு முதலில் லண்டனிலிருந்தும் பின்னர் பிரான்சில் இருந்தும் வெளிவந்தது. இன்னும் பிரான்சிலிருந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.